திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு ஆதி திராவிட குடியிருப்பை ஒட்டி ஊர் பெரியவர்கள் சிலர் 90 அடி நீளத்திற்கும், 8 அடி உயரத்திற்கும் சுவர் ஒன்றை எழுப்பினர்.