×

அன்னாசிப்பழ கேசரி

எப்படி செய்வது?

அன்னாசி பழத்தை, தோல் சீவி, கருப்பு புள்ளிகளை நீக்கி, நான்காக நெடுக்கே வெட்டவும். நடுவில் இருக்கும் அழுத்தமான தண்டை வெட்டி நீக்கவும். பொடியாக நறுக்கி, 3 மேஜைக்கரண்டி சக்கரை சேர்க்கவும். கலந்து, 30 நிமிடம் வைக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும். மேலே ரவையை சேர்த்து, மேலும் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, மிதமான தீயில் வறுக்கவும். இன்னொரு அடுப்பில், தண்ணீரை அளந்து, கொதிக்க விடவும்.

கொதித்தவுடன், வறுத்த ரவையில் மெதுவாக ஊற்றவும். மிகவும் கவனமாக ஊற்ற வேண்டும், இல்லையேல் கையில் தெளிக்கவோ, ஆவி அடிக்கவோ வாய்ப்புள்ளது. உப்பு சேர்த்து, கூழ் போல ஆகும் வரை கிளறவும். கரண்டியால் சமன் செய்து, மிதமான தீயில் 4 நிமிடம் மூடி வேக வைக்கவும். வெந்தவுடன், சக்கரை சேர்த்து, நன்கு மசித்தார் போல் கட்டியில்லாமல் கிளறவும். மிக சிறிய கட்டிகள், கிளறும் பொழுது கரைந்துவிடும், கவலை பட வேண்டாம்.

சக்கரை கரைந்து, இளகும் பொழுது, அன்னாசிப்பழ துண்டுகளை சேர்க்கவும் (தண்ணீரை வடித்து விடவும்). மஞ்சள் கேசரி கலர் சேர்த்து கலக்கவும். கிளறும் பொழுது, அவ்வப்போது 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து, கிளறினால், 4-5 நிமிடங்களில் கெட்டியாக திரண்டுவரும். அப்பொழுது, அடுப்பை நிறுத்தி, கேசரியின் மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்ற. சூடாகவோ, வெதுவெதுப்பாகவோ பரிமாறவும்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!