சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம் போக்சோவில் வாலிபர் கைது

பூந்தமல்லி: வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, இவர், அப்பகுதி பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்தார். கடைக்கு வந்து சென்ற ராமாபுரம், டி.எல்.எப். வளாகத்தில் உள்ள கேன்டீனில் வேலை செய்யும் அம்பூரூஸ் (28), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகியதால் 17 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அம்பூரூஸ், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதால் தனது தாயாருடன் சின்ன போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அம்புரூஸ் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அவர் அம்பூரூஸிற்கு போன் மூலம் கேட்ட போது சிறுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். கடந்தமாதம் 30ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை சார்பில் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் அம்புரூசை கைது செய்தனர்.

Related Stories: