சென்னை: மழைநீர் வடிகால் கட்டுமான பணி காரணமாக ஈவெரா சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஈவெரா சாலையில் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் திசையில், பர்னபி சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் கட்டுமான பணி மேற்கொள்ள உள்ளனர். இதனால், இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை, கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.