புழல்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அடுத்த அலமாதி அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலாஜி. இவரது மனைவி மித்ரா (20). நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் காலையில் அலமாதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர்.