புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்க்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், நாட்டின் விமானப்படை, ராணுவத்துக்கு வலுசேர்க்க அனைத்து காலநிலையிலும், இரவு நேரத்திலும் தாக்கும் திறன் கொண்ட 15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ரூ.3,887 கோடி மதிப்பில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானப்படைக்கு 10, ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட உள்ளன.