ஒரே மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

புதுடெல்லி: பயனாளர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாதந்தோறும் சமூக வலைதள நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு அறிக்கை தர வேண்டுமென தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாத அறிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் தந்துள்ளது.

அதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்து 28 ஆயிரத்து கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 13 லட்சம் கணக்குகள், பயனர்களின் புகார்களின் அடிப்படையில் முடக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் கணக்குகள் புகார்கள் ஏதுமின்றி முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: