புதுடெல்லி: ‘‘கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்பதற்காகவே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேனே தவிர, யாரையும் எதிர்ப்பதற்காக அல்ல’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் கார்கேவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், கார்கேவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், நேற்று அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுதொடர்பாக, டெல்லியில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கட்சியின் மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் என்னை போட்டியிடுமாறு வலியுறுத்தியதால் தான் தேர்தலில் களமிறங்கி உள்ளேன்.