உளவுத்துறை ரகசிய அறிக்கை; குஜராத்தில் பாஜவை ஆம் ஆத்மி வெல்லும் கெஜ்ரிவால் தகவல்

ராஜ்கோட்: குஜராத்தில் இப்போது தேர்தல் நடந்தால் பாஜவை ஆம் ஆத்மி வெல்லும் என உளவுத்துறையின் ரகசிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார். குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் தேர்தலில் பாஜவை எதிர்த்து ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் குஜராத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

அங்குள்ள ராஜ்கட்டில் கர்பா நடன நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘குஜராத்தில் இப்போது தேர்தல் நடந்தால், பாஜவை ஆத் ஆத்மி சொற்ப வித்தியாசத்தில் ஜெயிக்கும் என உளவுத்துறை அரசுக்கு ரகசிய அறிக்கை தந்துள்ளது. இதனால் பாஜ அரசு கடும் அதிருப்தியில் உள்ளது. எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென அவர்கள் தீவிர திட்டம் தீட்டுகின்றனர். குஜராத்தில் நாங்கள் வென்றால் பசு பராமரிப்புக்கு தினமும் ரூ.40 தருவோம்’’ என்றார்.

Related Stories: