சென்னை: காவலர்களின் உறவை பலப்படுத்தும் வகையில் கூடுவோம், கொண்டாடுவோம் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார். சென்னை காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விளையாட்டு நிகழ்ச்சிகள், போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் செலவழிக்கவும், உயரதிகாரிகளிடம் தங்கள் தேவைகளை எடுத்து கூறி, மகிழ்ச்சியுடன் பணிபுரியவும், ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்பேரில், சென்னை காவல் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கு பெறும் கூடுவோம், கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.