சென்னை: பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 421 தினக்கூலி பணியாளர்கள் தாங்கள் எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.