பாலக்காடு: நெல்லியாம்பதி, போத்துண்டி மலைப் பாதையில் குட்டியுடன் காட்டுயானை உலா வந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியாம் பதி - போத்துண்டி சாலை 14வது கொண்டை ஊசி வளைவில் குட்டி காட்டுயானை உலா வந்தது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போத்துண்டிவனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசு வெடித்தும், சத்தம்போட்டும் யானைகளை விரட்டினர்.