திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து இன்டிகோ விமானம் நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஆண் பயணியை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது உள்ளாடைக்குள் 354 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்க கலவையை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.