×

கேரளாவில் இளைஞரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வழக்கில் ஒருவர் கைது

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பிந்துகுமார்(40) என்பவரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ம் தேதி வீட்டை விட்டு சென்ற பிந்துகுமார் வீடு திரும்பாததால் அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்தார். பிந்துகுமாரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது சங்கனாச்சேரியில் உள்ள முத்துகுமாரிடம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.


Tags : Kerala , Kerala, case of killing and burying a youth, one arrested
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...