×

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே அங்கு பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சோனியா காந்தியை தொடர்ந்து மாநிலங்களை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மலர்கள்தூவி மரியாதை செலுத்தினார்.


Tags : Modi ,President ,Troubati Murmu ,Intar Malarduvi ,Mahatma Gandhi , PM Modi, President Draupadi Murmu pay floral tributes at Mahatma Gandhi's 154th birth anniversary
× RELATED ஜனநாயக விரோத செயலில் மோடி ஈடுபடுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு