பெரம்பூர்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், வடசென்னையை சேர்ந்த 11 பாஜ பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வடசென்னை மாவட்ட அரசு தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் நவீன் குமார், மண்டல தலைவர் விஜய், துணை தலைவர்கள் அகஸ்டின், பார்த்திபன், இளைஞர் அணியை சேர்ந்த லோகேஷ், சரண், சசிகுமார், ஊடக பிரிவை சேர்ந்த வெங்கடேசன், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சஞ்சய் உள்ளிட்ட 11 பேர் நேற்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை அவரது இல்லத்தில் சந்தித்து, தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.