சென்னை: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கர், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் நிலம் வாங்குவதற்காக, ரூ.33 லட்சத்துடன் சொகுசு காரில் பொள்ளாச்சி நோக்கி கடந்த 28ம் தேதி புறப்பட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் ஓசப்பாளையம் கிராமம் அருகே கார் சென்றபோது, நள்ளிரவு 12 மணியளவில் எதிர்திசையில் இருந்து காரில் வந்த மர்ம நபர், பாஸ்கர் வந்த காரை வழிமறித்து, அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர், காரில் வைத்திருந்த ரூ.33 லட்சம் மற்றும் 24 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பினார்.