சென்னை: தமிழ் நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் நாடகத்துக்கு குரல் கொடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்கள் ஒலிச்சித்திரமாக வெளியாகும். ரேடியோவில் ஆடியோ நாடகங்கள் ஒளிபரப்பாகும். அந்த பாணியில் தற்போது புகழ்பெற்ற ஆங்கில நாவல்கள் ஆடியோ நாடகமாக தயாரிக்கப்பட்டு வெளியாகிறது. அந்த வரிசையில் டிசி என்ற நிறுவனம் வெளியிட்ட ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ என்ற ஆடியோ நாடகம் உலகப் புகழ்பெற்றது. தற்போது 3ம் பாகம் வெளியாகி இருக்கிறது. இதில் ஸ்ருதிஹாசன் ஒரு வீட்டு பணிப்பெண் கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.