வேலூர்: வேலூர் அடுத்த பள்ளிகொண்டாவில் தேசிய நெடுஞ்சாலையோரம் கார் ஒன்றில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் ரூ.14.70 கோடி நோட்டு கட்டுகள் கொண்ட 30 பண்டல்களை லாரியில் ஏற்றியபோது பிடிபட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலையில் நேற்று காலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒருவர் திடீரென 500 ரூபாய் நோட்டு கட்டுகளை சர்வீஸ் சாலையோரம் வீசியபடி சென்றார். அவ்வழியாக சென்றவர்கள் அவற்றை எடுத்து பார்த்தனர். அவை புதிய ரூ. 500 நோட்டுகளாக இருந்தது.