கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிமுகம் செய்தார். அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை சகித்துக்கொள்ள முடியாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோவை மதுக்கரை பிரித்விராஜ் (40). மதிவாணன் (33) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து பாலத்துறைக்கு புறப்பட்ட அரசு டவுன் பஸ்சில் துளசியம்மாள் (70) என்பவரை ஏற்றினர். பிரித்விராஜ், மதிவாணன் மற்றும் அதிமுகவை சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர் பின் தொடர்ந்தனர். பஸ் சிறிது தூரம் சென்றதும் கண்டக்டர் இலவச டிக்கெட்டை மூதாட்டிக்கு தர வந்தபோது, அவர் ஓசி டிக்கெட் வேண்டாம். கட்டண டிக்கெட் வேண்டும் என்று பணத்தை நீட்டினார். கண்டக்டர் மூதாட்டியிடம் கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து கூறினார்.