புதுடெல்லி: இந்தியாவில் கடந்த மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11.16 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கிராமங்கள் வரை சென்றடையக் காரணமாக இருந்தது யுபிஐ தான். கட்டணமில்லா சேவை என்பதால் கூகுள் பே, போன் பே போன்ற ஆப் கள் மூலமாக யுபிஐயை பயன்படுத்தி பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.