புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிக்கும் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘2022 செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 686 கோடியை எட்டி உள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலான ரூ.1.17 லட்சம் கோடியை விட 26 சதவீதம் அதிகமாகும்.