வாரணாசி: நவராத்திரி விரதத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட வாரணாசி பல்கலைகழக கவுரவ பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீட பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியவர் மிதிலேஷ் கவுதம். இவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பெண்கள் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசிலயமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது.