புதுடெல்லி: இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் 6வது முறையாக தேர்ந்தெடுக்கபப்ட்டுள்ளது. தூய்மையான நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தி ஒன்றிய அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி, ‘ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2022’ என்ற பெயரில் 4,354 நகரங்களில் தூய்மை, சிறப்பான செயல்பாடு போன்ற பல்வேறு பிரிவுகளில் முடிவுகளை ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, இந்தியாவின் தூய்மையான நகரமாக 6வது முறையாக மத்தியபிரதேசத்தின் இந்தூர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 2ம் இடத்தை குஜராத்தின் சூரத்தும் தக்க வைத்து கொண்டன. 3வது இடம் நவி மும்பையும் பிடித்து உள்ளது. சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பிரிவில், மத்தியப் பிரதேசம் முதல் இடத்தையும், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா முறையே 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளன.