தமிழகத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும்; தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு: 02.10.2022  (நாளை) அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு:

* கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி  மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும்.

* 2020 - 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 பேருக்கு மேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு  உரிமை உண்டு.

* 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு  ஆக்கப்பூர்வ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

* உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல்  தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை  என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு  உரிமை உண்டு.

* கிராம சபை கூட்டத்தில்  மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

* ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும்  ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழக அரசு  கிராம சபை கூட்டம் தெரிவித்தும், நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்  அளிக்க  வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சியரிடம்  புகார் தெரிவிக்கவும்.

* மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்.

* கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது.  தீர்மானம் சரி அல்லது தவறு  முடிவெடுக்கும் அதிகாரம்  நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டும்.

* கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்றால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தனி பிரிவு - எண் : 044 25672345, 044 25672283, 9443146857.

Related Stories: