கோவை: திமுக ஆட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கோவை மூதாட்டி, அதிமுக பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் ஏறி ஓசி டிக்கெட் வேண்டாம் என்று நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என்று நடத்துனரிடம் மூதாட்டி தகராறு செய்த வீடியோ வெளியானது. அதிமுக பிரமுகர் பிருத்விராஜ் என்பவர் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.