தாம்பரம்: ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து கடப்பா கல் ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை பள்ளிக்கரணை நோக்கி வந்த லாரி வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச் சாலை வழியாக தாம்பரம் - முடிச்சூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த கடப்பா கல் மீது படுத்து தூங்கிக் கொண்டு வந்த சிவாரெட்டி (36), வரதராஜுலு (52) ஆகியோர் மீது விழுந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.