இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார். இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தனது உதவியாளர் ஷபாஸ் கில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார். மேலும், கில்லை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய கூடுதல் செஷன்ஸ் பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டினார். இதனால், அவர் மீது தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.