மகேஷ் பாபு வீட்டில் திருட முயற்சி: சுவர் ஏறி குதித்த வாலிபர் கால் முறிவு

திருமலை: ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் மகேஷ்பாபுவின் வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்றார். ஆனால், வீட்டின் மதில் சுவர் 10 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் அந்த நபர் கதறினார். சத்தம் கேட்ட பாதுகாவலர் ஓடிவந்து அவரை பிடித்து ஜூப்லி ஹில்ஸ் போலீசில் ஒப்படைத்தார்.

காயமடைந்த திருடனை உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா (28) என்பதும், கடந்த வாரம் ஐதராபாத் வந்த அவர் மரக்கன்றுகள் விற்கும் நர்சரியில் பணியில் சேர்ந்துள்ளார். இரவில் திருட முயன்று கால் உடைந்தது தெரிய வந்தது. சிகிச்சைக்கு பிறகு கிருஷ்ணாவை கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: