சென்னை: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி உலக மையத்துடன் இணைந்து மகாத்மாவைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காந்தியடிகள் கைப்பட எழுதிய கடிதம், டெலிகிராம், அவரது நினைவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அரிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்புக் கண்காட்சி அருங்காட்சியக சிறப்பு கண்காட்சிக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.