பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தை நாளை மறுநாள் தொடங்கிவைக்க இருந்தது. அங்கு உணவு பொருட்கள் உட்பட மளிகை பொருட்கள் 17 ஆயிரம் நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் மக்களை கவரும் வகையில் கோதுமை பாக்கெட்டை வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்ய பஞ்சாப் அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.