சூரத், செப்.30: சூரத்தை பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக மாறுவதற்கு, கனவு நகர் திட்டம் உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குஜராத்திற்கு 2 நாள் பயணமாக நேற்று சென்றார். சூரத் விமான நிலையத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று பொதுமக்களை அவர் சந்தித்தார். பின்னர், சூரத் நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ29,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.