சென்னை: ராமாபுரத்தில் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை பூந்தமல்லி சாலை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலையின் நடுவே தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள், கிரேன்களின் உதவியுடன் தூக்கி நிறுத்தி கான்கிரீட் போடப்படும். அதன்படி லாரியிலிருந்து பில்லர் கம்பியை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணியின் போது எதிர்பாராத விதமாக 30 அடி நீளமுள்ள பில்லர் கம்பி அவ்வழியே வந்த பேருந்து மீது விழுந்தது.