மெட்ரோ கட்டுமான பணி விபத்து இன்ஜினியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

சென்னை:  ராமாபுரத்தில் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை பூந்தமல்லி சாலை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலையின் நடுவே தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள், கிரேன்களின் உதவியுடன் தூக்கி நிறுத்தி கான்கிரீட் போடப்படும். அதன்படி லாரியிலிருந்து பில்லர் கம்பியை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணியின் போது எதிர்பாராத விதமாக 30 அடி நீளமுள்ள பில்லர் கம்பி அவ்வழியே வந்த பேருந்து மீது விழுந்தது.

அதில் 3 பேர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து மெட்ரோ பொறியாளர்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இவ்வாறு மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: