சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 113வது வார்டு திமுக கவுன்சிலர் பிரேமா சுரேஷ் பேசுகையில், ‘‘சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா சிலை எதிரே உள்ள பூங்காவை எல்லோரும் ‘கொக்கு பார்க்’ என்று அழைக்கிறார்கள். அதை மாற்றி ‘கலைஞர் பூங்கா’ என்று பெயர் வைத்து அழைக்க அனுமதி அளிக்க வேண்டும். அதேபோன்று பெரியார் சாலையில் பூங்கா உள்ளது. அந்த பூங்காவை பெரியார் சாலை பூங்கா என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.