ஐகோர்ட் ஊழியர்களிடமும் தொழில் வரி வசூலிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி கடிதம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் அனுப்பி உள்ளார். பதிவாளருக்கு நீதிபதி அனுப்பிய கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர் பல ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை எனக்கூறி கடிதம் அனுப்பி உள்ளார்.

தொழில் வழி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பள கணக்கு அலுவலகத்தில் தொழில் வெடித்தம் செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்ற ஊழியர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால், உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டும் தொழில் வரி வசூலிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

அனைத்து அரசுத்துறை மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 12 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் தொழில்வரி செலுத்தி வரும் நிலையில் உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு 59 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,  நீதிமன்ற பணியாளர்களுக்கான தொழில் வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 24 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: