வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற அனுமதி அளித்த உத்தரவு எங்கே?.. அரசு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வனப்பகுதியில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுகளை வனத்துறை தொடங்கியுள்ளது. ஆய்வுக்குப் பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணியை தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்துக்கு கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, கடந்த முறையும் இதே அறிக்கைதான் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் தள்ளிவைக்கிறோம். அடுத்த விசாரணையின் போது, அந்நிய மரங்களை அகற்றும் பணியை செய்தித்தாள் நிறுவனத்துக்கு வழங்கியது தொடர்பான உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட துறை செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும். அரசின் கொள்கை காகிதங்களில் இல்லாமல் செயல்வடிவம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: