சென்னை: தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வனப்பகுதியில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுகளை வனத்துறை தொடங்கியுள்ளது. ஆய்வுக்குப் பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணியை தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்துக்கு கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.