சென்னை: நன்னடத்தை விதி மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட கொள்ளையனுக்கு 327 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சாலிகிராமம் தசரதபுரம் புருஷோத்தமன் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). இவர் மீது வழிப்பறி உள்பட 2 குற்ற வழக்ககுள் உள்ளன. கடந்த 22ம் தேதி மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் முன்பு சாட்சிகளுடன் ஆஜரான இவர், திருந்தி வாழப்போவதாக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொத்தார்.
ஆனால், அதை மீறி கடந்த 21ம் தேதி இரவு வெங்கடேசன் என்பவரை கத்தியால் வெட்டியதால், அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையன் சந்தோஷ்குமாருக்கு, 327 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து மயிலாப்பூர் மாவட்ட துணை கமிஷனர் திஷா மிட்டல் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் வழிப்பறி கொள்ளையன் சந்தோஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.