சின்னாளபட்டி: பாளையன்கோட்டை ஊராட்சியில் முடங்கி உர கிடங்கு செயல்படாததால், அப்பகுதி முழுவதும் குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது பாளையன்கோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முடங்கி வருகிறது. குறிப்பாக பாளையன்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, குப்பைகளை தரம்பிரிக்கும் உரக்கிடங்கு முறையாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைக்கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.