சென்னை: தி.நகர் அபிபுல்லா சாலையை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது தாய் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு வட்டிக்கு ரூ2 லட்சம் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து பல மாதங்களுக்கு பிறகு சுப்ரமணி வாங்கிய கடனில் ரூ1 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ1 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது தாய் கொடுத்த கடனை திரும்ப பெற லட்சுமி, தி.நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சுப்ரமணி வீட்டிற்கு அடிக்கடி சென்று பணத்தை கேட்டுள்ளார்.