நள்ளிரவில் குழிதோண்டி பூஜை தொழிலாளி நரபலியா?

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(50). இவரது மனைவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகன்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு லட்சுமணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று காலை, வீட்டின் அருகிலுள்ள வெற்றிலை தோட்டத்தில் சுமார் ஒன்றரை அடி பள்ளத்தில் உட்கார்ந்தபடி, லட்சுமணன் இறந்து கிடந்தார். சடலம் அருகே, கோழி பலியிடப்பட்டு இருந்தது. மேலும், எலுமிச்சம்பழமும் கிடந்தது. தகவலறிந்து கெலமங்கலம் போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: