சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையிலிருந்து மதியம் வரையில் வெயில் கொளுத்தியது. ஆனால், பிற்பகல் 3.30 மணியில் இருந்து திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த விமானங்களளும் நீண்டநேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. திருச்சி, புனே, கொல்கத்தா, டெல்லி, மதுரை, பெங்களூரூ ஆகிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு வந்த 6 விமானங்கள், தரையிறங்காமல் நீண்ட நேரமாகவே வானில் வட்டமடித்து பறந்துகொண்டிருந்தன. அதன்பின்பு மழை ஓய்ந்ததும் அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னையில் தரையிறங்கின.