துபாய்: சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை அந்நாட்டின் புதிய பிரதமராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மன்னராட்சி அமலில் உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இதன் அரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல் அஜீஸ், இந்தாண்டு 2 முறை உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, தனது மூத்த மகன் முகமது பின் சல்மானை அரசராக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், அரசர் அப்துல் அஜீஸ் நாட்டின் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நிறுவி உள்ளார். அதன்படி, 37 வயதாகும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார்.