2002ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் (முத்தரப்புதொடர்) யுவராஜ் - கைப் ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா 325 ரன் என்ற கடினமான இலக்கை கடைசி ஓவரில் வெற்றிகரமாகத் துரத்தி அசத்தியது. அந்த அபார வெற்றியை கொண்டாடிய கங்குலி தனது டி-ஷர்ட்டை அவிழ்த்து தலைக்கு மேலாக சுழற்றிய சம்பவம் மறக்க முடியாத வரலாற்றுப் பதிவானது. மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பிளின்டாப் அவ்வாறு கொண்டாடியதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே தான் அப்படி நடந்துகொண்டதாக கங்குலி பின்னர் தெரிவித்தார்.