அக்டோபர் 2 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மதிமுக பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 2 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மதிமுக பங்கேற்கும் என வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  

02.10.2022 அன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்த திட்டமிட்டுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தினை மதிமுக வரவேற்று ஆதரவு அளிக்கிறது.

இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி மக்களை வர்ணாசிரம அடிப்படையில் பிளவுபடுத்தும் சங் பரிவார் சக்திகள் அண்மைக்காலமாக தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இப்படிப்பட்ட சூழலில் உத்தமர் காந்தியார் பிறந்த நாள் - பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் ஆகிய சிறப்பிற்குரிய அக்டோபர் 2, அன்று நடைபெற உள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மதிமுக இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழகத் தோழர்களுடனும், நிர்வாகிகளுடனும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories: