சின்னாளபட்டி: பாளையன்கோட்டை ஊராட்சி காமன்பட்டியில் சிறுமின்விசை தண்ணீர்தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர்ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சியில் பாளையன்கோட்டை, கூலாம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காமன்பட்டியில் இருந்து புது காமான்பட்டி செல்லும் வழியில் சிறுமின்விசை தண்ணீர் தொட்டி உள்ளது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த தொட்டியில் நீரேற்றும் மின்மோட்டார்களை பழுதடைந்துள்ளது. இதனால் தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது.