சிறைக்குள் பெண் டாக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற கைதி

புதுடெல்லி: சிறைக்குள் பெண் டாக்டரை கைதி ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மன்டோலி சிறையில் உள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் டாக்டர் ஒருவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல கைதிகளின் உடல்நிலையை பரிசோதனை செய்தார்.

அப்போது பலாத்கார வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர், திடீரென பெண் டாக்டரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே டாக்டர் அலறியதால் அங்கிருந்த சிறை காவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியை பிடித்து விசாரித்து வருகிறார்கள். சிறைக்குள் பெண் டாக்டரை கைதி ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: