கூடலூர் : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள ஊசி மலை காட்சி முனை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பழங்குடியினரின் பாரம்பரிய இசை நடனத்துடன் மலர் செண்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. எஸ்கேஏஎல் சர்வதேச சுற்றுலா அமைப்பு கோவை, சிடிஆர்டி பழங்குடியினர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஊசிமலை காட்சி முனைப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் செண்டு வழங்கியும் இனிப்பு வழங்கியும் வரவேற்பு அளித்தனர்.