ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 7 தலைகள் கொண்ட ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதி உலா வந்தார். 2வது நாளான இன்று காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.