தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு மதுரை, தேனி ஆட்சியர்கள் தண்ணீரை திறந்து வைத்தனர். 300 மி.கனஅடி நீர் திறப்பு மூலம் உசிலம்பட்டி, நிலக்கோட்டையில் உள்ள 2,284 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 58ம் கால்வாய் திட்டத்தில் உள்ள 35 கண்மாய்களுக்கும் வினாடிக்கு 150 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.