சென்னை தாம்பரம் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீசார்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். பூந்தண்டலம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சச்சினை  பிடிக்க முயன்ற பொது காவலர் பாஸ்கரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி சச்சின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் ரவுடி சச்சினை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்களில் அவர் ஈடுபட்டு வருவதால் அவரை பிடிப்பதற்காக போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றனர்.

எருமையூர் கிராமத்தில் கூட்டாளிகளுடன் ஒரு கல்லூரின் பின்புறம் காட்டு பகுதியில் மறைந்திருந்த போது, போலீசார் அவர்களை  பிடிக்க சென்றனர். அப்போது காவலர் பாஸ்கர் என்பவரை ரவுடி சச்சின் இடது தோள்பட்டையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக ரவுடி சச்சினின் இடதுகால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் காயமடைந்த ரவுடி சச்சின் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் ரவுடி தாக்கியதில் காயமடைந்த காவலர் குரோபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை உயர் அதிகாரிகள் காயமடைந்த காவலரை நேரில் சந்தித்து உடல் நிலை குறித்து விசாரித்தது ஆறுதல் கூறினார்.

Related Stories: